web log free
May 10, 2025

நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கை

இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையை கைவிடப் போவதில்லை என தபால் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

ஆட்சேர்ப்பு, பதவி உயர்வு, சம்பள முறைமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால், எதிர்காலத்தில் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் 24 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட அஞ்சல் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என அஞ்சல் சேவைகள் அமைச்சர் ஏ.எச்.எம். ஹலீம் நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd