web log free
September 20, 2024

கரு இராஜினாமா

 

ஜனநாயக தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, கரு ஜயசூரியவை நியமிப்பதற்கு தீர்மானித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனையடுத்து, தன்னுடைய சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதற்கு, கரு ஜயசூரிய தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்தும் இராஜினாமா செய்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெ ளியானதன் பின்னர், சபாநாயகர் பதவியை அவர் இராஜினாமா செய்வார் என பாராளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், எதிர்வரும் பொதுத் தேர்தலில், மீண்டும் பிரதமர் வேட்பாளராக, ரணிலே களத்தில் நிற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

 

Last modified on Saturday, 07 September 2019 12:42