web log free
May 09, 2025

மொட்டு மாநாடு குறித்து மைத்திரி மந்திரலோசனை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழு, நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு கம்போடியாவிலிருந்து இன்று அதிகாலை 12:55க்கு நாடு திரும்பியது.

சிங்கபூர் விமானச் சேவைக்கு சொந்தமான எஸ்.கிவ்-468 என் விமானத்திலேயே கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக அந்தக் குழு, நாட்டுக்குத் திரும்பியது.

நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து, அவசர சந்திப்பொன்றில் ஈடுபட்டார்.

சுகததாஸ உள்ளக அரங்கில் இன்று ஞாயிறுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது என அறியமுடிகின்றது.

Last modified on Sunday, 11 August 2019 09:42
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd