web log free
May 09, 2025

எரிபொருட்களின் விலை எகிறியது

எரிபொருள்  விலைச்சூத்திரத்துக்கு அமைய நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. 

அதன்படி, 92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாயாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.

ஐ.ஓ.சி ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றா் ஒன்றின் விலை 4 ரூபாயாலும், சுப்பா் டீசல் லீற்றா் ஒன்றின் விலை 3 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd