web log free
April 06, 2026

அநுரவுக்கு அலை திரண்டு ஆதரவு

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவுச் செய்யப்பட்ட அவரை, கடல் அலையையும் மேவி, ஆதரவாளர்கள் அணிதிரண்டு வரவேற்றனர்.

கடந்த 20 வருடங்களுக்குப் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை ஜே.வி.பி. களத்தில் இறக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் எவ்விதமான ஐயமும் இல்லை

Last modified on Saturday, 07 September 2019 12:40
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd