web log free
September 08, 2025

பளையில் கைதுகள் தொடர்கின்றன

பளை வைத்தியத்தியசாலை வைத்திய அதிகாரி சி.சிவரூபனுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர், நேற்று கைதுசெய்துள்ளனர்.

வைத்திய அதிகாரி சி.சிவரூபன், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட வைத்தியரை பயங்கரவாத தடுப்பு பிரிவனர் தடுத்து வைத்து தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  இந்நிலையிலேயே மேலும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட மூவரும், யாழில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டு, தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd