web log free
January 18, 2026

சாரதிக்கு தூக்கம்: 8 பேர் படுத்தனர்

வேனின் சாரதிக்கு ஏற்பட்ட தூக்க கலக்கம் காரணமாக, அந்த வேன் பள்ளத்துக்குள் பாய்ந்து, விபத்துக்குள்ளாது. அதில் காயமடைந்த குழந்தைகள் இருவர் உட்பட எட்டுப்பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், ஹொரணை மத்துகம பிரதேத்தில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கிரிகெட்டிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. காயங்களுக்கு உள்ளானவர்கள் மத்துகம, வேத்தேவ வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தெனியாய பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய, கடந்த 31 ஆம் திகதி சுற்றுலா சென்று, வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த போதே, இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd