web log free
December 05, 2023

‘ரணிலே ஆணி அடித்தார்’

 
சுதந்திரக் கட்சியின் மாநாட்டில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கடுமையாக திட்டித்தீர்த்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் அடித்த ஆணியால், மாகாண சபைத் தேர்தலை நடத்தமுடியாதுள்ளது என்றார்.
அதற்கான முதலாவது பிரதிவாதி ரணில் விக்கிரமசிங்க, அவரே, அரசாங்கத்துக்குள் இருந்துகொண்டு குழப்பங்களை விளைவித்தார். அதனால்தான், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினேன் என்றார்.
அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்குள் கொண்டுவருவதற்கான ஆவணங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்னர், முக்கிய புள்ளியொருவர் சிறை கூண்டுக்குள் செல்வார் என்றார்.
 
Last modified on Tuesday, 03 September 2019 14:22