web log free
November 19, 2025

நானா? நீயா? ஞாயிறு முடிவாகும்

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யார் போட்டியிடவிருக்கின்றனர் என்பது தொடர்பில் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சந்திப்பு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் மட்டுமே இடம்பெறவிருக்கிறது. 

அவ்விருவர் மட்டுமே சந்தித்து தீர்மானம் ஒன்றை எட்டட்டும் என, அலரிமாளிக்கையில்  இன்று சந்தித்துக்கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் சந்திப்பில் ஏகமனதாக தீரி்மானிக்கப்பட்டுள்ளது. 

 

Last modified on Monday, 09 September 2019 02:24
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd