web log free
February 05, 2026

ரணில்-சஜித் தனியாக சந்திக்கவில்லை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில், தனியாக மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் தனியாக சந்தித்துகொள்ளவில்லை.

நேற்றிரவு இடம்பெற்ற அந்த சந்திப்பில், கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசிம், அமைச்சர்களான ராஜித்த சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

 

Last modified on Thursday, 12 September 2019 02:02
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd