web log free
November 07, 2025

அழையா விருந்தாளியால் பாராளுமன்றில் பதற்றம்

பாராளுமன்றத்தின் முன்வாசல் வரையிலும் வந்துச் சென்ற அழைய விருந்தாளியினால், பாராளுமன்றத்துக்குச் செல்வதற்கே பலரும் அஞ்சுகின்றனர்.

கடும் மழைக்காரணமாக, தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் கரையைத் தொட்டுத் தொட்டு செல்கின்றது.

இந்நிலையில், அந்த விருந்தாளி நேற்றுக்காலை வேளையில், பாராளுமன்றத்தின் முன்வாசலுக்கு வந்துள்ளார்.

அவ்வாறு வந்திருந்தவர், அயர்ந்துவிட்டார்.

விருந்தாளியான முதலையின் விவகாரத்தினால் பாராளுமன்றத்தில் இனம்புரியாத அச்சம் நிலவுகிறது. 

அந்த வாவியிலிருந்து, முதலை முட்டைகள் பல, அண்மையில் மீட்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd