web log free
September 03, 2025

ரணில்,சஜித்,சம்பந்தன் பேச்சு நின்னுபோச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை எவ்விதமான இணக்கப்பாடுமின்றி நிறைவடைந்தது.

மூவருக்கு இடையிலான சந்திப்பு அலரிமாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது.

நேற்றுமாலை ஆரம்பிக்கப்பட்ட பேச்சுவார்த்தை இரவு 10 மணிக்கு மேல் நடைபெற்றதாக அறியமுடிகின்றது. 

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் விஞ்ஞாபனம் வெளியிட்டதன் பின்னர், அதுதொடர்பில் கலந்துரையாடி, இறுதித்தீர்மானம் எட்டப்படுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் 

Last modified on Tuesday, 01 October 2019 02:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd