web log free
May 09, 2025

பதவியைத் துறக்க மைத்திரி முடிவு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை துறப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என உத்தியோகப் பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தளங்கள் பலவற்றிலும் இந்தச் செய்தி வைரலாகியுள்ளது.

இன்று நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மேற்கண்ட தீர்மானத்தை எடுத்துள்ளார் என அறியமுடிகின்றது.

இதேவேளை, கட்சின் பதல் தலைவராக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, கடமைகளை பொறுப்பேற்க உள்ளார் என அறியமுடிகின்றது. 

Last modified on Friday, 11 October 2019 00:47
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd