web log free
September 03, 2025

கோல்பேஸ் மேடையில் மாற்றுக்கட்சியினர் ஏறுவர்?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம், கொழும்பு காலி முகத்திடலில் (கோல்பேஸ்) இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.

இது ஒரு சவாலான கூட்டமாகும் என அறியமுடிகின்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதன் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை அனுராதபுரத்தில் நேற்று (09) ஆரம்பித்தது.

அதில், பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ, உள்ளிட்ட பெருந்திரளானோர் பங்கேற்றனர்.

அதுமட்டுமன்றி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலரும் கோத்தாவுக்கு ஆதரவளித்து அந்த மேடையில் ஏறினர்.

மக்கள் தேசிய சக்தி, அதன் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை, ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நேற்றுமுன்தினம் (09) நடத்தியது. 

இந்நிலையில், காலி முகத்திடலை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, கடந்த மே தினத்தன்று பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கூட்டத்தை களமிறக்கியது.

அதேபோல, மக்கள் தேசிய சக்தியின் வேட்பாளரை  அறிவிப்பதற்காக, ஜே.வி.பியினால் ஏற்பாடு செய்தியிருந்த கூட்டத்திலும் பெருந்திரளான மக்கள் பங்கேற்றிருந்தனர்.

இவ்வாறான நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் கூட்டம்,  பெரும் திரளான மக்கள் கூட்டத்தை காண்பிக்க வேண்டும்.

இந்நிலையில், ஐக்கிய தேசிய முன்னணியின் முதலாவது கூட்டத்தில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர், பங்கேற்பர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

 

Last modified on Friday, 11 October 2019 00:47
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd