web log free
June 30, 2025

மஹிந்த அணி புறக்கணிப்பு


பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் 14, 15 மற்றும் 16ஆம் திகதிகளில் இடம்பெற்ற, அசாதாரண நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழுவினர், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்தனர்.

அறிக்கையைப் பெற்றுக்கொண்ட சபாநாயகர், அதனை வாசித்து எதிர்காலத்தில் நடவடிக்கைகளை எடுப்பேன் என்றார்.

இதேவேளை, மேற்படி நாட்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அங்கம் வகித்திருந்த மஹிந்த அணியைச் சேர்ந்த உறுப்பினர்களான சந்திரசிறி கஜதீர மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், அறிக்கையை கையளிக்கும் போது அங்கு சமுகமளித்திருக்கவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd