web log free
September 03, 2025

5 தமிழ் கட்சிகளில் பிளவு- முடிவின்றி கூட்டம் முடிந்தது

 பொது உடன்படிக்கையில் கையெழுத்திட்ட ஐந்து தமிழ் கட்சிகளும் எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேசுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை கொழும்பில் ஐந்து கட்சி தலைவர்கள் சந்திப்பு சடைபெறுமென திட்டமிடப்பட்டிருந்தபோதும், அதில் மூன்று கட்சிகளின் தலைவர்களே கலந்து கொண்டனர். இன்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

இதில் இரா.சம்பந்தன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவர் சி .வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd