பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனது பிரதமர் பதவியை நாளை இராஜினாமா செய்கிறார்..
அதனையடுத்து காபந்து அரசாங்கம் அமைக்கப்படும்.
இந்த அரசாங்கம், 2020 வரையிலும் ஆட்சியில் இருக்கும்.
காபந்து அரசாங்கத்துக்காக, புதிய அமைச்சரவை நாளை (20) சத்தியப்பிரமாணம் செய்யும்.
இதில் 13 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருப்பர்.
பிரதமராக தினேஸ் குணவர்தன நியமிக்கப்படலாம்.
அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடைபெறும்.