web log free
September 08, 2025

ஸ்ரீ காந்தாவுக்காக வருந்தினார் செல்வம்

தமிழீழ விடுதலை இயக்கத்திலிருந்து (டெலோ) நீக்கப்பட்டவர்கள், பிரிந்து சென்றவர்கள் ஆரம்பித்து “தமிழ்த் தேசியக் கட்சி” எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமேயாகுமெனத் தெரிவித்துள்ள டெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், எப்போதும் பலமாகவே, டெலோ இருக்கிறது. ஆகையால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், யாழ்ப்பாணத்திலிருந்து ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கும் என்றார்.

யாழ்ப்பாணம், நாவலர் மண்டபத்தில் ரெலோ கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுடன் இன்று (15) கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்த, செல்வம் அடைக்கலநாதன், அதற்காக, கட்சியின் தொண்டர்கள் ஒத்துழைக்கவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு முன்னின்று செயற்பட்டது எமது கட்சி மட்டுமேயாகுமெனத் தெரிவித்த அவர், எமது கட்சியிலிருந்து எங்களை உருவாக்கிய, எம்மை வழிநடத்திய முன்னாள் பொது செயலாளர் சிறிகாந்தா, சிறிய விடயத்துக்காக பிரிந்துள்ளமை கவலையளிக்கின்றது. தமிழரசுக் கடசியின் மீதுள்ள கோபத்தில் அவர்களுடன் இணைந்து செயற்பட முடியாதென தனிக் கட்சியை ஆரம்பித்துள்ளார். இது எமக்கு வருத்தத்தை தருகின்றது என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd