web log free
February 02, 2026

கரு கடும் சீற்றம்

தனக்கோ, பிரதி சபாநாயகருக்கோ, பாராளுமன்றத்துக்கோ, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என கடுமையாக சாடியுள்ள சபாநாயகர் கரு ஜயசூரிய, இது பாராளுமன்ற சம்பிரதாயங்களை மீறும் செயற்பாடாகும் என்றார்.

வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் சபாநாயகர், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது தொடர்பில், வெளியிட்டிருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற சம்பிரதாயங்களை கடுமையாக கடைப்பிடிக்கும் நான், இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd