web log free
October 18, 2024

“ஐஸ்” எடுத்து சென்ற 14பேர் கைது

சிவனொளிபாதமலைக்குச் சென்று சிவபெருமானை தரிசிப்பதற்காக, யாத்திரை சென்றிருந்தவர்களில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனார். ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில், தியகல சோதனை சாவடியில் வைத்து பொலிஸ் மோப்பநாயின் உதவியுடன் அவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடமிருந்து ஹெரோய்ன், மதனமோதகம், கேரளா கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பொலிஸார் கையற்றப்பட்டுள்ளன. கொழும்பு, அவிசாவளை, காலி, எல்பிட்டிய, கம்பஹா .ஆகிய பகுதிகளை சேர்ந்த 20க்கும் 30வயதுக்கும் இடைப்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். கைது செய்யபட்ட 14 சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என, ஹட்டன் குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 25 December 2019 14:02