web log free
August 01, 2025

தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய தேவையில்லை


சுதந்திர தினக் கொண்டாட்டங்களை, தேசிய தினக் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது என, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜிர அபேவர்தன அண்மையில் கூறியிருந்த நிலையில், சுதந்திர தினத்தை, தேசிய தினமாக அறிவிக்கவேண்டிய அவசியம் கிடையாது என, அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கூறியுள்ள அவர்,

அரசியலமைப்பின் ; 8ஆம் சரத்தில், சுதந்திர தினம் என்பதற்கு பதிலாக, தேசிய தினம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது என, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்ததைக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தினத்தை மாற்றுவதற்கான எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என்று கூறினார்.

அரசியலமைப்பின் பிரகாரம், இனிவரும் காலங்களில், பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி, தேசிய தினமாகக் கொண்டாடப்படும் என்று, அமைச்சர் வஜிர அபேவர்தன கூறியிருந்ததோடு, பெப்ரவரி மாதம் கொண்டாடப்படுவது தேசிய தினமேயன்றி, அது சுதந்திர தினம் அல்ல என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd