web log free
July 03, 2025

படுத்துகொண்டார் ராஜித்த: கருவுக்கு கடிதம் அனுப்பி​யது சி.ஐ.டி

 

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிடியாணையின் பிரகாரம், சி.ஐ.டியினர் அவரை கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையிலேயே அவர், இவ்வாறு வைத்தியசாலையில் தன்னை தானே அனுமதித்துக்கொண்டார்.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பிரகாரம். அவரை கைதுசெய்வதற்கான அனுமதியைக் கோரி, பாராளுமன்ற சம்பிரதாயங்களின் பிரகாரம், சபாநாயகருக்கு சி.​ஐ.டி கடிதமொன்றையும் அனுப்பிவைத்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Last modified on Friday, 27 December 2019 02:08
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd