web log free
May 09, 2025

2020இல் சம்பள அதிகரிப்பு இல்லை;பந்துல

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் கீழ், 2020 ஆம் ஆண்டு சம்பள அதிகரிப்பு வழங்கப்பட மாட்டாது என, அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இந்த அரசாங்கம் இடைக்கால அரசாங்கமாகும். இடைக்கால அரசாங்கத்தின் அடுத்த கட்ட நகர்வு, பொதுத் தேர்தலை ஒட்டியதாக இருக்கும். அரச செலவீனங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஆனால், அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட வரி குறைப்புகள் இன்று (1) முதல் அமுல்படுத்தப்படும். இதனூடாக அரச ஊழியர்கள் மட்டுமன்றி, தனியார்துறை ஊழியர்களும் நன்மையடைவர் என்றார். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd