web log free
February 02, 2026

அதிசியமான வாழை குலை

வீட்டுத்தோட்டமொன்றில் வளர்க்கப்பட்ட வாழை மரமொன்று, வழமைக்கு மாறான முறையில் காய்த்துள்ளது.

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட மஜ்மாநகரிலேயே இந்த அதிசய சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இரு வாரத்துக்குமுன் சிறிய வாழைப்பூ வெளிப்பட்டிருந்த நிலையில் தற்போது அது பெரிய வடிவில் ஒரு வாழைக்காயுடன் மாத்திரம் காய்த்து நிற்கின்றது.

கோழிக்கூடு வாழை வகை கொண்ட இவ் அதிசய வாழைமரத்தைப் பார்வையிட பொதுமக்கள் படையெடுத்துள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd