web log free
October 29, 2025

12 மாணவர்கள் கைது

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் 12 பேர், சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பகிடி வதை குற்றச்சாட்டின் கீழே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பகிடி வதைக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என்ற அச்சத்தினால், வருடத்துக்கு 2000 மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில்லை என, ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Last modified on Friday, 10 January 2020 11:35
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd