web log free
September 16, 2024

'நல்ல திட்டங்களுக்கு ஒத்துழைப்போம்'


வங்கி வட்டி மிகவேகமாக அதிகரித்துச் செல்வதுதான் சகலரினதும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவ்வாறான நிலையில் அரசாங்கம் கொண்டுவருகின்ற நல்ல பலத்திட்டங்களுக்கு நாங்கள் எங்களுடைய ஒத்துழைப்பை கொடுப்போம். ஆதேநேரத்தில், மக்களுக்கு தீங்கிழைக்கக்கூடிய ஏதாவது திட்டங்களை இந்த அரசாங்கம் கொண்டுவருமாயின் எவ்விதமான நிபந்தனைகளுமின்றி அவற்றை எதிர்ப்போம்' என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். '

ஹம்பாந்தோட்டை வெடிய கமராலகம வாவியை புனரமைக்கப்பட்டதன் பின்னர், அதனை திறந்துவைக்கும் வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'விவசாயக அமைச்சராக, கடந்த காலங்களில் பல்வேறான வேலைத்திட்டங்களை நாங்கள் முன்னெடுத்தோம். இந்த அமைச்சில் சில மாதங்கள் மட்டுமே நானிருந்தேன். எனினும், பல வருடங்கள் நான் வேலைச்செய்ததாக பலரும் தெரிவிக்கின்றனர்' என்றார்.

Last modified on Sunday, 27 January 2019 23:14