web log free
September 01, 2025

புதருக்குள்ளிருந்து துப்பாக்கி மீட்பு


ஏ.எச்.ஏ. ஹுஸைன்

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் ஐயங்கேணி கிராமத்திலுள்ள புதரொன்றுக்குள்ளிருந்து ரி- 56 ரக துப்பாக்கியுடன் மகஸின் ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவு பெறுப்பதிகாரி எஸ்.எஸ்.எம். சமிந்த தலைமையில் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் எஸ். புரிசோத்தமன் உட்பட புலனாய்வு பிரிவினர் ஸ்தலத்திற்கு விரைந்து மேற்படி துப்பாக்கியையும் மகஸினையும் மீட்டெடுத்தனர்.

மீட்கப்பட்ட இத்துப்பாக்கியும் மகஸினும் துருப்பிடித்த நிலையில் காணப்படுவதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாகவும் ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd