web log free
April 07, 2026

ரிஷாத்தின் மனைவிக்கு சி.ஐ.டி அழைப்பு

 

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் மனைவியிடமும் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் என அறியமுடிகின்றது.

இதுதொடர்பில், சி.ஐ.டியினர் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கடந்த வௌ்ளிக்கிழமை கொண்டுவந்திருந்தனர்.

வௌ்ளவத்தை பிரதேசத்தில் வீடொன்றை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதிலிருந்து கிடைத்த ஆவணங்களை அடிப்படையாக வைத்தே, ரிசாத் பதியூதீனின் மனைவியிடம் சி.ஐ.டியினர் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd