அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு, இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதை, அஸ்கிரிய மாநாயக்க தேரர் கடுமையாக கண்டித்துள்ளார்.
அதுதொடர்பில், அஸ்கிரிய பீட பதிவாளர் வண. மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ள எம்.சி.சி யோசனையை கைச்சாத்திட்டு கொள்ளும் நோக்கிலேயே, இராணுவ தளபதி சவேந்திர சில்வாவுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எம்.சி.சி. ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டு கொள்வதற்காக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கும் அமெரிக்காவினால் இவ்வாறு தடை விதிக்க முடியும் என, அஸ்கிரிய மாநாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.