மார்ச் 2 ஆம் திகதி பாராளுமன்றம் கலைப்பு
மார்ச் 11 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை வேட்பு மனுத்தாக்கல்
ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல்
மே மாதம் 12ஆம் திகதி புதிய பாராளுமன்றம் ஆரம்பம்
பாராளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதியன்று கலைக்கப்படும். அதன் பின்னர், தேர்தல் ஏப்ரல் மாதம் 25ஆம் திகதியன்று நடத்தப்படும். இதுதொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
அவ்வாறு கலைக்கப்படுமாயின் வேட்பு மனுக்கள் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மேற்கொள்ளபடும் என அறியமுடிகின்றது.
பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய பாராளுமன்றம் மே மாதம் 12ஆம் திகதியன்று கூட்டுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளது என அறியமுடிகின்றது.