பாடசாலை மாணவர்கள் நால்வரை பாலியல் ரீதியில் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அந்த வித்தியாலத்தின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பொலன்னறுவையை சேர்ந்த அதிபர், அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை புலஸ்திபுர நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
திருமணம் முடித்து 3 பிள்ளைகளுக்கு தந்தையான, 47 வயதான அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.