web log free
October 18, 2024

வேண்டாம், வேண்டாம் என்கிறார் கோத்தா

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, மீண்டுமொரு தடவை கடுமையான அறிவித்தலை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவால் வெளியிடப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் இது தொடர்பில் ​அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தன்னுடைய புகப்படம் தாங்கிய ஓவியங்கள் ஏனைய வர்ணங்களில் கீறப்பட்ட படங்கள் ஆகியவற்றை பிரசித்தமான இடங்களில் பிரசுரப்படுத்த வேண்டாம் என, அந்தந்த தரப்பினரிடம் கேட்டுக்​கொண்டுள்ளார்.

ஜனாதிபதியின் உருவம் தாங்கிய புகைப்படங்கள், எவ்விதமான கண்காணிப்பும் இன்றி, உற்சவ மண்டபகங்களில் இரண்டு பக்கங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தன்னுடைய புகைப்படங்களை வரைந்தவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, தன்னுடைய புகைப்படங்களை காட்சிப்படுத்துவதை தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.