சகல அரசாங்க பாடசாலைகளும் ஏப்ரல் 20ஆம் திகதி வரையிலும் தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கல்விமைய்சர் டலஸ் அழகபெரும தெரிவித்தார்.
கல்வியமைச்சில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஏற்பட்டிருக்கும் நிலைமைகளை கவனத்தில் கொண்டு, தனியார் பாடசாலைகள் மற்றும் வகுப்புகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கவும் தயார் என்றார்.
இதனால் பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் அறிவித்தார்.
முதலாம் தவணை விடுமுறையாக இந்த விடுமுறையை வழங்குவதாகத் தெரிவித்த அவர், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துவிடும் என்ற அச்சத்தால் இவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.