web log free
May 09, 2025

ஊரடங்கில் பஜா- மூவர் கைது

பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது, பாடல்களை பாடியதுடன், பஜா அடித்து, மதுபானங்களை அருந்தி கொண்டிருந்தவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாரியபொலவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள், வாரியபொல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்னர். 

அவ்விடத்தில் 20க்கும் மேற்பட்டவர்கள் இருந்துள்ளனர். பொலிஸார் வருவதை கேள்வியுற்று ஏனையோர் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர் என விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது. 

இதேவேளை, அவ்விடத்திலிருந்து பப்பல்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 

 

Last modified on Monday, 30 March 2020 01:41
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd