web log free
April 08, 2026

248 ஆக உயர்ந்தது

சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பகுதி இன்று (18) மாலை வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை, 248 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் (2020.04.18) இதுவரையில் கொரோனா வைரசு தொற்றினால் பாதிக்கப்பட்டு உறுதிசெய்யப்பட்ட நோயாளர்கள் 4 பேர் பதிவாகியிருப்பதாக
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க உறுதிசெய்தார்.

இதற்கமைவாக இதுவரையில் இலங்கையில் பதிவான மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 248 ஆகும். இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 4 நோயாளர்களில் மூவர் ஒலுவில்
தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த நபர்களாவதுடன் மற்ற நோயாளி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

Last modified on Saturday, 18 April 2020 13:08
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd