web log free
October 23, 2024

பொன்சேகாவின் பதவியை பிடுங்கினார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டிருந்த களனி தொகுதி அமைப்பாளர் பதவியை, கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவரிடமிருந்து அபகரித்துள்ளார்.

சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் எம்.பிகளுக்கு எதிராக, ரணில் விக்கிரமசிங்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். 

அதன் மற்றுமொரு செயற்பாடாகவே அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்படுகின்றன.