web log free
April 08, 2026

கொழும்பு மாநகர சபையில் ஒருவருக்கு கொரோனா

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஹெவ்லொக் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (27) இனங்காணப்பட்டுள்ளார். 

கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் நேற்று (27) அடையாளம் காணப்பட்டதையடுத்து, நாரஹேன்பிட்டி-தாபரே மாவத்தை பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதற்கு முன்னர் குறித்த பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இனங்காணப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையின்போதே, மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர்  நாயகம் தெரிவித்துள்ளார். 

 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd