web log free
May 31, 2026

ஆளுநர் சுரேன் ராகவனின் அதிரடி

வடமாகாணத்தில் உள்ள சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுமாறு, வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், நகரங்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளின் உண்மைத்தன்மை மற்றும் சட்டத்தன்மையை உரிமையாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அதனை செய்யத்தவறும் உறுதிப்படுத்தாக சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருப்பதாக, ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை வைத்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd