web log free
September 03, 2025

2 மணிநேரத்துக்குள் இருவருக்கு கொரோனா

இன்று (05) மாலை 6.30க்கு வெளியான அறிக்கையின் பிரகாரம், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 760ஆக அதிகரித்திருந்தது.

எனினும், இரவு 8.15க்கு வெளியான அறிக்கையின் பிரகாரம், அந்த எண்ணிக்கை 762 ஆக அதிகரித்துள்ளது. 

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி, குணமடைந்தோரின் எண்ணிக்கை, 213 ஆக உயர்ந்துள்ளது அதில், இரண்டு மணிநேரத்தில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படவில்லை.

மரணமடைந்தோரின் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. இன்றும் நேற்றும் தலா ஒவ்வொருவர் மரணித்துள்ளனர் அவர்கள் இருவரும் பெண்கள் ஆவர். 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd