web log free
June 07, 2023

எஸ்.எம்.எஸ் அனுப்பியது யாரென்று தெரியாது

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், 2019 ஆம் ஆண்டு பிறப்பின் போது, வாழ்த்துத் தெரிவித்து எஸ்.எம்.எஸ் குறுஞ்செய்திகளை அனுப்பியது யாரென்று தெரியாது என பதிலளிக்கப்பட்டுள்ளது.

அந்த வாழ்த்து குறுஞ்செய்தி தொடர்பில் தகவலறியும் சட்டத்தின் ஊடாக ஜனாதிபதி செயலகத்துக்கு ஜனவரி 2 ஆம் திகதியன்று விண்ணப்பம் செய்யப்பட்டது.

விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்கள் தங்களுடைய தரவுகளில் இல்லை என்பதால், அந்த விண்ணப்பத்தை நிராகரிப்பதாக, ஜனாதிபதி செயலகம் அனுப்பிவைத்துள்ள பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.