web log free
February 08, 2026

கொழும்பில் நாளை நீர் விநியோகத்தடை

கொழும்பின் பல பகுதிகளில் நாளைய தினம் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நாளை இரவு ஒன்பது மணி முதல் மறுநாள் பிற்பகல் 3.00 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறவுள்ளதாக அந்த சபை கூறியுள்ளது.

கொழும்பு 01, 13, 14 மற்றும் புறக்கோட்டை ஆகிய பகுதிகளில் மட்டுப்படுத்தப்பட்ட நீர் விநியோகம் இடம்பெறும்.

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை குறிப்பிட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd