web log free
February 08, 2026

பஸ் பொட்டாவின் 11 சகாக்கள் கைது?

 

பஸ் பொட்டா என்றழைக்கப்படும் பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கு, கம்பஹா மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. அதனால், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், கம்பஹா நீதிமன்ற வளாகத்தில், சந்தேகத்துக்கிடமான முறையில் நின்றிருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 11 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பஸ் பொட்டாவின் சகாக்களா அல்லது வேறு பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவர்களா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd