web log free
September 03, 2025

ஆகஸ்டில் பாராளுமன்ற தேர்தல்

பாராளுமன்றத் தேர்தலுக்கான திகதியை குறிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கூட்டம், இன்று (3) நடைபெறவுள்ளது. 

இந்த கூட்டத்தின் போது, தேர்தலுக்கான திகதி குறிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்படவுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தகவல்களின் பிரகாரம் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி அல்லது 15ஆம் திகதியன்று தேர்தல் நடத்தப்படும்.

இதேவேளை, அரசாங்க அச்சகத் திணைக்களத்தில், தேர்தல்கள் தொடர்பிலான ஆவணங்களை அச்சிடும் பணிகள், நேற்றே தொடங்கிவிட்டன என அறியமுடிகின்றது. 

Last modified on Monday, 08 June 2020 06:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd