web log free
May 31, 2026

3,876 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது, பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 950 பேர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் 3,876 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மதுபோதையில் வாகனத்தை செலுத்திய 950 சாரதிகளும் இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஹெரோய்ன் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் தம்வசம் வைத்திருந்தனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், 1,033 பேர் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன், சட்டவிரோதமான முறையில், ஆயுதங்களை வைத்திருந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd