web log free
April 20, 2024

'தேர்தலுக்காகவே அரசியலமைப்பு பிரசாரம்'

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது மக்கள் செல்வாக்கு கொண்ட ஒருவரையே, தாம் வேட்பாளராக முன்நிறுத்தவுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்துக் கொண்ட பின்னர் ஊடகங்களிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கழிந்துள்ளன. எனினும், தமிழ் மக்களை திருப்திபடுத்த முடிந்துள்ளதுடன், அரசியல்வாதிகளை திருப்பதிபடுத்த முடியவில்லை” என, அவர் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், கடந்த நான்கு வருடங்களில் அவ்வாறான ஒரு செயற்பாடு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல்களில் வாக்குகளை பெற்றுக் கொள்ளவே இவ்வாறான முயற்சி தற்போது, மேற்கொள்ளப்படுவதாக மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

Last modified on Wednesday, 11 September 2019 01:39