web log free
March 28, 2024

குடிதண்ணீர் கொண்டு வருவதற்கு தடை

நாடாளுமன்றத்துக்கு வருகை தருவோர் மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள், நாடாளுமன்ற வளாகத்துக்குள் குடிநீர் போத்தல்களை கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்றில் சகல இடங்களிலும் குடிதண்ணீர் காணப்படும் நிலையில், வெளியில் இருந்து குடிதண்ணீர் கொண்டு வருவது அவசியமற்றது என நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற ஊழியர்கள், இவ்வாறு குடிநீர் போத்தல்களை கொண்டு வருவதற்கு பாதுகாப்பு அதிகாரிகள் அனுமதிஅளிக்க மாட்டார்கள் என்று கூறப்படுகின்றது.