web log free
February 02, 2026

கொள்ளையை முறியடித்த கான்ஸ்டபிள் பலி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெற்ற கொள்ளையை முறியடித்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து காரணமாக உயிரிழந்துள்ளார்.

22 வயது பொலிஸ் உத்தயோகத்தர் பம்பலப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

11 ம் திகதி விபத்தில் சிக்கிய நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை தேசிய புலனாய்வு பிரிவை சேர்ந்த சித்தும் அலகப்பெரும என்ற பொலிஸ் உத்தியோகத்தரே உயிரிழந்துள்ளார்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd