web log free
April 26, 2024

புதையல் அகழ்ந்தவர்கள் கைது

கேகாலை, திப்பொட்டுமுனாவ பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ராதன பொருட்களை பெற்றுக்கொள்ளும் நேக்கில் வீடொன்றுக்குள் சந்தேக நபர்கள் இவ்வாறு தோண்டுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கோகலை, ரிதியகம பகுதியில் வசித்து வரும்
42,62,32,51,22 ஆகிய வயதுடைய சந்தேக நபர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் அகழ்வு நடவடிக்கைக்கு பயன்படுத்திய உபகரணங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களை கோகலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினர்.