web log free
May 09, 2025

நாடு திரும்பினார் மஹிந்த

ந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளார்.

இன்று நண்பகல் 12.10 மணியளவில் ஹைதரபாத் நகரிலிருந்து யூ.எல். 178 என்ற விமானம் மூலம் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்திய ஊடகமொன்று ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் விசேட அதிதியாக கலந்துக்​கொள்வதற்காக, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் கடந்த 8ஆம் திகதி இந்தியாவுக்கு சென்றிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd