web log free
April 19, 2024

கார்பன் ஆய்வு அறிக்கை இன்று

கார்பன் பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் ஆய்வு அறிக்கை இன்று, இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த அறிக்கை, 10 வருட காலத்தை அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மன்னார் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் 144ஆவது நாளாக நேற்று (13) அகழ்வுப் பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.